இருசக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி

 

இருசக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி

விழுப்புரம்

திண்டிவனம் அருகே தலைமை காவலர் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கோபாலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த கார் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த தர்மராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தை

இருசக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி

ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றதால், பொதுமக்கள் அந்த காரை துரத்திச்சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் கார் ஓட்டுநருக்கு தர்மஅடி கொடுத்து, மயிலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் செய்யாறு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் கதிர்வேல் என்பது தெரியவந்தது. மேலும், அவர் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.