நீர்நிலைகளில் கழிவுகளை கொட்ட எதிர்ப்பு – கிராம மக்கள் போராட்டம்

 

நீர்நிலைகளில் கழிவுகளை கொட்ட எதிர்ப்பு – கிராம மக்கள் போராட்டம்

தர்மபுரி மாவட்டம் சின்னம்பள்ளி கிராமத்தில் நீர்நிலையில் மருத்துவக்கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

நீர்நிலைகளில் கழிவுகளை கொட்ட எதிர்ப்பு – கிராம மக்கள் போராட்டம்

அப்போது, அங்குள்ள நாகாவதி ஆற்றின் கரைப்பகுதிகளில் மர்மநபர்களால் கொட்டப்படும் கழிவுகளால் ஆற்றில் துர்நாற்றம் வீசுவதாகவும், ஆற்றில் குளிக்கும் விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு உடல்நலம் பாதிப்பதாகவும் புகார் தெரிவித்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

நீர்நிலைகளில் கழிவுகளை கொட்ட எதிர்ப்பு – கிராம மக்கள் போராட்டம்