ஆக்கிமிப்புக்கு உள்ளான பொதுக்குளத்தை மீட்க கோரி கிராம மக்கள் மனு!

 

ஆக்கிமிப்புக்கு உள்ளான பொதுக்குளத்தை மீட்க கோரி கிராம மக்கள் மனு!

நாகை

நாகை அருகே பொதுக்குளத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த வடக்குவெளி கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான பொதுக்குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சிலர், குளத்தில் கழிவுநீரை கலந்து மக்கள் பயன்படுத்த முடியாமல் செய்ததாக கூறப்படுகிறது.

ஆக்கிமிப்புக்கு உள்ளான பொதுக்குளத்தை மீட்க கோரி கிராம மக்கள் மனு!


இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட வடக்குவெளி
கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று பொதுக்குளத்தை மீட்கக்கோரி மனு அளித்தனர்.