விளாத்திகுளம் நீதிமன்ற நீதிபதிக்கு, கொரோனா தொற்று உறுதி!

 

விளாத்திகுளம் நீதிமன்ற நீதிபதிக்கு, கொரோனா தொற்று உறுதி!

தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை பரவல் தீவிரமடைந்து உள்ளது. தினசரி பாதிப்பு 500ஐ நெருங்கியுள்ள நிலையில், மருத்துவர்கள், போலீசார் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

விளாத்திகுளம் நீதிமன்ற நீதிபதிக்கு, கொரோனா தொற்று உறுதி!

இந்த நிலையில், விளாத்திகுளத்தில் உள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்ற நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரியும் சரவணன் என்பவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, நீதிபதி சரவணன், தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

முன்னெச்சரிக்கை அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் பேரூராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர். மேலும், விளாத்திகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், கோவில்பட்டி கிளை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.