“தேமுதிகவில் நடக்கும் எதுவும் விஜயகாந்திற்கு தெரியாது” – தேமுதிக முன்னாள் மாவட்ட செயலாளர் பரபரப்பு புகார்!

 

“தேமுதிகவில் நடக்கும் எதுவும் விஜயகாந்திற்கு தெரியாது” – தேமுதிக முன்னாள் மாவட்ட செயலாளர் பரபரப்பு புகார்!

தேமுதிக வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்.

“தேமுதிகவில் நடக்கும் எதுவும் விஜயகாந்திற்கு தெரியாது” – தேமுதிக முன்னாள் மாவட்ட செயலாளர் பரபரப்பு புகார்!

இந்நிலையில் திமுகவில் இணைந்த வடசென்னை தேமுதிக முன்னாள் மாவட்ட செயலாளர் மதிவாணன் செய்தியாளர்களை சந்தித்த போது, 41 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என தேமுதிக சொல்வதிலிருந்து கட்சி நிலை தெரிகிறது. தேமுதிகவில் நடக்கும் எதுவும் அக்கட்சித் தலைவர் விஜயகாந்திற்கு தெரியாது என்றார்.

“தேமுதிகவில் நடக்கும் எதுவும் விஜயகாந்திற்கு தெரியாது” – தேமுதிக முன்னாள் மாவட்ட செயலாளர் பரபரப்பு புகார்!

முன்னதாக சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து ஜனவரி மாதம் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் அவர் முன்பு போல சுறுசுறுப்பாக இல்லை; ஆனாலும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் தெரிவித்தார்.