விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் – மியாட் மருத்துவமனை தகவல்!

 

விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் – மியாட் மருத்துவமனை தகவல்!

சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக அண்மையில் தேமுதிக தலைவர் விஜயாகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இதனிடையே பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா உறுதியானதால் அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2ம் தேதி இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர்.

விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் – மியாட் மருத்துவமனை தகவல்!

இன்று காலை விஜயகாந்த் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தேமுதிக அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் – மியாட் மருத்துவமனை தகவல்!