“காதலிச்சிட்டு இப்ப கழட்டி விட்டுட்டியே”-கடுப்பான காதலன் பண்ண வேலையால் இருவரும் இறந்தனர் ..
தன்னை காதலித்து விட்டு ஏமாற்றிய பெண்ணின் மீது அவரின் காதலன் தீ வைத்து கொளுத்திய போது இருவருமே அந்த தீயில் சிக்கி உயிரிழந்தனர் .
ஆந்திராவின் விஜயவாடா மாவட்டம் ஹனுமன்பேட்டையில் சின்னாரி என்ற ஒரு செவிலியர் கொரானா பராமரிப்பு மையத்தில் பணி புரிந்து வந்தார் .அவர் நாகபூஷணம் என்ற வாலிபரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தார் .ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தார் அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தததால் சின்னாரி திடீரென அந்த காதலனோடு பேசுவதை நிறுத்தி கொண்டார் .ஆனால் அந்த காதலன் நாகபூஷணம் அந்த பெண்ணை தொடர்ந்து காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார் .
இதனால் கடுப்பான அந்த பெண்ணின் குடும்பத்தார் நாக பூஷணம் மீது போலீசில் புகார் கூறினார்கள் .போலீசார் அவரை கூப்பிட்டு எச்சரித்து அனுப்பியதும் ,அந்த பெண்ணின் குடும்பத்தார் வழக்கை வாபஸ் பெற்றனர் .
ஆனால் தன்னை காவல் நிலையத்தில் அவமான படுத்திய அந்த பெண்ணை அவர் பழி வாங்க துடித்தார் .அதனால் கடந்த திங்கள் கிழமையன்று வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த அந்த பெண்ணை அவரின் முன்னாள் காதலன் நாகபூஷணம் வழி மறித்து தகராறில் ஈடுபட்டார் .இதனால் இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு, அந்த காதலன் அந்த பெண்ணின் மீது கெரோசின் ஊற்றி தீ வைத்தார் .இதனால் அந்த பெண் உடல் முழுவதும் தீ பிடித்து எறிந்த போது, அவரின் காதலனை வந்து கட்டி பிடித்தார் .இதனால் அவரின் மீதும் தீ பற்றிக்கொண்டது .இந்த தீ விபத்தில் இருவருமே உயிரிழந்தார்கள் .மேற்கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .