“எங்க அப்பாவ தான் ஒழிச்சீங்க… என்னயாவது வாழ விடுங்க” – மக்களை நோக்கி விஜயகாந்த் ஆவேசம்!

 

“எங்க அப்பாவ தான் ஒழிச்சீங்க… என்னயாவது வாழ விடுங்க” – மக்களை நோக்கி விஜயகாந்த் ஆவேசம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பாஸ்கரனை ஆதரித்து, விஜய பிரபாகரன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் என்ன மாற்றத்தை கண்டீர்கள். நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் ஆசைப்பட்டு வாக்கை விற்பனை செய்தால், கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது.

“எங்க அப்பாவ தான் ஒழிச்சீங்க… என்னயாவது வாழ விடுங்க” – மக்களை நோக்கி விஜயகாந்த் ஆவேசம்!

எய்ம்ஸ் மருத்துவமனை கல்லை காட்டிய உதயநிதி ஸ்டாலின், கச்சத்தீவு சென்று ஒரு பிடி மண்ணை கொண்டு வந்து காட்ட முடியுமா?. ஒரு விரலை நீட்டி பேசும்போது, மற்ற 3 விரல்கள், உங்களை நோக்கி காட்டுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக, மக்களுக்காக ஓடி ஓடி உழைத்த விஜயகாந்த்தை ஒழித்துக்கட்டி விட்டீர்கள். அதேபோல் என்னையும் ஒழித்து கட்டிவிடாதீர்கள். இளைஞராக உள்ள என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு உழைக்க நான் தயாராக உள்ளேன். ஒரே ஒருமுறை தேமுதிகவுக்கு வாய்ப்புக் கொடுங்கள்.

“எங்க அப்பாவ தான் ஒழிச்சீங்க… என்னயாவது வாழ விடுங்க” – மக்களை நோக்கி விஜயகாந்த் ஆவேசம்!

விஜயகாந்த் தனது சொந்த செலவில், விருத்தாசலத்தில் வளர்ச்சிக்கு உதவினார். அதேபோல் பாஸ்கரனை வெற்றி பெற வைத்தால், எம்எல்ஏ நிதி மற்றும் ஊதியம் முழுவதும் ஆரணி மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்ட வேண்டும் என்ற எனது தந்தை விஜயகாந்தின் கனவை நனவாக்க வந்துள்ளேன். திமுக, அதிமுக வேண்டாம். ஒரு முறை முரசுக்கு வாய்ப்பு கொடுங்கள்” என்றார்.