சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை விஜயலட்சுமி போராட்டம்!

 

சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை விஜயலட்சுமி போராட்டம்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருபவர் நடிகை விஜயலட்சுமி. இவர், சீமான் மற்றும் ஹரி நாடார் ஆகியோர் தன்னை மிரட்டுவதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றார். இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வீடு வந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை விஜயலட்சுமி போராட்டம்!

இந்நிலையில் இன்று விஜயலட்சுமி சீமான் மற்றும் ஹரி நாடார் மீது நடவடிக்கை கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 2 மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசாரின் சமரச பேச்சு வார்த்தையை தொடர்ந்து விஜயலட்சுமி தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

போராட்டத்திற்கு நடுவே செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி, “பாஜக பிரமுகர் ஜெயலட்சுமி எனக்கு உதவி செய்ததால், பாஜக தூண்டுதல் காரணமாக நான் போராடுவதாக பேசுகிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை நாடகம் என்று கிண்டலடிக்கின்றனர். எனக்கு யார் வேண்டுமானாலும் உதவி செய்வார்கள். இது பேசி தீர்க்க முடியாத பிரச்சனையா? இதனை ஜாதி பிரச்சனையாக்காதீர்கள். தமிழ் தேசியம் பேசும் சீமான் , ஒரு பெண்ணை அவமரியாதையாக பேசுவது சரியா? நாயும், பூனையுமாக இருக்கும் நாங்கள் சேர்ந்து வாழ்வது என்பது சாத்தியமில்லை. நானும் விரும்பவில்லை. இதனை பேசி தீர்க்க வேண்டும்” எனக்கூறினார்.