விஜயகாந்த் இனி ‘கிங்’ஆக இருப்பார் ; கூட்டணியில் ட்விஸ்ட் வைக்கும் பிரேமலதா விஜயகாந்த்

 

விஜயகாந்த் இனி ‘கிங்’ஆக இருப்பார் ; கூட்டணியில் ட்விஸ்ட் வைக்கும் பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் அக்கட்சி நிர்வாகிகள், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

விஜயகாந்த் இனி ‘கிங்’ஆக இருப்பார் ; கூட்டணியில் ட்விஸ்ட் வைக்கும் பிரேமலதா விஜயகாந்த்

இந்நிலையில் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரது மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், “பேரவைத் தேர்தலில் தேதிமுக கூட்டணியா ? தனித்து போட்டியா என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். இப்போதைக்கு அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. தேர்தலின்போது முடிவு எடுக்கப்படும். தேர்தல் நெருங்கும் போது செயற்குழு, பொதுக் குழுவைக் கூட்டி முடிவு எடுக்கப்படும்” என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் இனி ‘கிங்’ஆக இருப்பார் ; கூட்டணியில் ட்விஸ்ட் வைக்கும் பிரேமலதா விஜயகாந்த்

“தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்கள், நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது.விஜயகாந்த் இனி கிங்காக இருக்க வேண்டும் என்பதே தேமுதிக தொண்டர்களின் எண்ணம்” என்று கூறிய அவரிடம், அதிமுக சார்பில் மக்களவை சீட்டு கிடைக்காததில் வருத்தம் அளிக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிகவிற்கு கிடைக்கவேண்டியது உரிய நேரத்தில் கிடைக்கும் “என்றார்.