வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: நிபுணர்கள் குழு அமைக்குமாறு விஜயகாந்த் கோரிக்கை!

 

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: நிபுணர்கள் குழு அமைக்குமாறு விஜயகாந்த் கோரிக்கை!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தே இன்னும் இந்தியா மீண்டு வரவில்லை. அதற்குள் மற்றொரு பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகமாக இருப்பதாகவும், அவரை பயிர்களை எல்லாம் சேதப்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. தற்போது ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிக அளவில் இருக்கிறது. ஆனால் இந்த வெட்டுக்கிளிகள் தக்காண பீடபூமியை தாண்டி தமிழத்துக்கு வராது என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: நிபுணர்கள் குழு அமைக்குமாறு விஜயகாந்த் கோரிக்கை!

இந்நிலையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பது தொடர்பாக தே.மு.தி.மு.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மிக ஆபத்தான பாலைவன வெட்டுக்கிளிகள் கென்யா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் வழக்கமாக இந்தியாவுக்கு படையெடுக்கும் இவை 27 ஆண்டுகளுக்கு பிறகு பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளதால் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: நிபுணர்கள் குழு அமைக்குமாறு விஜயகாந்த் கோரிக்கை!

வடமேற்கு மாநில விளைநிலங்களை பெருமளவு சேதப்படுத்தி பத்தில் ஒரு மடங்கு மக்களை பட்டினிக்கு தள்ளும் இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வராது என்று தமிழக வேளாண்துறை தெரிவித்திருந்தாலும் அதன் இடப்பெயர்ச்சியை கணிக்க முடியாது என்றும் தமிழகம் விவசாய பூமி என்பதால் தமிழக எல்லையில் வெட்டுகிளிகளை தடுத்து நிறுத்துவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துறைசார்ந்த நிபுணர்கள் ஒரு குழுவை அமைத்து வெட்டுக்கிளியின் இடப்பெயர்ச்சியை கண்காணிக்க வேண்டும் என்றும் ஆபத்து ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.