ஆட்டோ, டாக்சி உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்! – விஜயகாந்த் கோரிக்கை

 

ஆட்டோ, டாக்சி உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்! – விஜயகாந்த் கோரிக்கை

ஆந்திர மாநிலத்தில் ஆட்டோ, டாக்சி உரிமையாளர்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு, தரச் சான்றிதழ் புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்குவது போல் தமிழக அரசும் வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு, தரச்சான்றிதழ் ஆகியவற்றைப் புதுப்பிக்க ₹10,000 வரை தாங்கள் செலவு செய்வதாக ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். எனவே, ஆந்திராவில் வாகன மித்ரா திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் ரூபாய் வழங்குவது சாத்தியமாகும் போது,
தமிழகத்திலும் இதுபோன்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, நமது ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.