“இப்டியா பிள்ள வளப்பீங்க” – கேள்வி கேட்ட சிறுமியின் பெற்றோரை திட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்!

 

“இப்டியா பிள்ள வளப்பீங்க” – கேள்வி கேட்ட சிறுமியின் பெற்றோரை திட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக, அதிமுக, அவற்றின் கூட்டணிக் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜய பாஸ்கர் மூன்றாம் முறையாகக் களமிறங்கியிருக்கிறார். ஏற்கெனவே இருமுறை வெற்றிபெற்றதால் ஹாட்ரிக் வெற்றியைச் சுவைக்க பெரும் பாடு பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு திமுக சார்பில் களமிறங்கியிருக்கும் தென்னலூர் பழனியப்பன் டஃப் கொடுக்கிறார்.

"இப்டியா பிள்ள வளப்பீங்க" - கேள்வி கேட்ட சிறுமியின் பெற்றோரை திட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்!

இதனால் அமைச்சர் மாவட்டம் முழுவதும் வேட்டியை மடித்துக்கொண்டு பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார். அவ்வாறு பிரச்சாரம் செய்வதற்காக விஜயபாஸ்கர் ஒரு கிராமத்திற்குச் சென்ற போது, சிறுமி ஒருவர் எங்கள் தொகுதியில், சுடுகாட்டிற்குச் செல்ல சாலை வசதியில்லை, குடிநீர் வசதியில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு சிறுமி கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த விஜயபாஸ்கர், “மக்களுக்காக உழைக்கும் ஒருவரை தவறாகப் பேசக்கூடாது. இந்த ரோட்டை போட்டத்தற்கு பிறகு நன்றி சொல்வேன் என்றால் எப்படி, தார் ஊற்றிய பிறகு நன்றி சொல்வீர்களா?


மூன்று நாட்களாக நான் பல ஊர்களுக்குச் சென்றுவருகிறேன் யாரும் இதுபோன்று கேள்வி கேட்கவில்லை. நீங்க, பெண் பிள்ளையை அதுவும் சிறு பிள்ளையைத் தப்பாக வளர்த்துள்ளீர்கள். தப்பாக தயார்படுத்தியுள்ளீர்கள். யார் நல்லவர், யார் கெட்டவர் என சொல்லி கொடுத்து வளருங்கள்” என்று பெற்றோரை திட்டியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.