தனித்து போட்டி என்றாலும் தேமுதிகவிற்கு பயமில்லை- விஜய பிரபாகரன்

 

தனித்து போட்டி என்றாலும் தேமுதிகவிற்கு பயமில்லை- விஜய பிரபாகரன்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ளன. அதற்கான பணிகள் தீவிர படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கட்சிகள் பிரச்சாரத்தில் களமிறங்கிவிட்டன. தேர்தலுக்கான கூட்டணி பற்றி கட்சிகளுக்குள்ளாக பேச்சுவார்த்தை நடக்கிறது. தற்போது குறித்த கூட்டணிகள் தொடருமா? அல்லது தேர்தல் நேரத்தில் கூட்டணியில் மாற்றம் இருக்குமா? என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிக, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கை கோர்ப்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை

தனித்து போட்டி என்றாலும் தேமுதிகவிற்கு பயமில்லை- விஜய பிரபாகரன்

இந்நிலையில் செங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தற்போது வரை அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம். 2006 ஆம் ஆண்டே தேர்தலில் தனித்து போட்டியிட்டுள்ளதால் தனித்து போட்டி என்றாலும் தேமுதிகவிற்கு பயமில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரப்புரைக்கு வருவார். சசிகலா முழுமையாக உடல்நலம் தேறி வர வேண்டும்” எனக் கூறினார்.