எனது தந்தை வசந்த குமார் எம்.பி. நலமுடன் உள்ளார்: மகன் விஜய் வசந்த்

 

எனது தந்தை வசந்த குமார் எம்.பி. நலமுடன் உள்ளார்: மகன் விஜய் வசந்த்

தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, எம்.பி வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், அவர் விரைந்து நலம் பெற தான் விரும்புவதாகவும் கூறினார். இதனைத்தொடர்ந்து வசந்தகுமார் சீக்கிரமாக குணமடைய வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பதிவிட்டிருந்தார்.

எனது தந்தை வசந்த குமார் எம்.பி. நலமுடன் உள்ளார்: மகன் விஜய் வசந்த்

இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை வசந்த குமார் எம்.பி. நலமுடன் உள்ளார் என மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். அப்பாவுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டது என்றும் பரிசோதனை நடத்தி அதன் முடிவு வந்த பின்னர் தான் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதே தெரிய வந்தது என்றும் தெரிவித்தார். மேலும் அதுவரை சளி, காய்ச்சல், தொண்டைவலி, மூச்சுத்திணறல் என எந்த அறிகுறியும் அவருக்கு இல்லை எனக்கூறிய விஜய் வசந்த், அப்பாவுக்கு ஆக்ஸிஜன் அளவு திடீரென குறைந்ததால் தற்போது ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் என்றும் தெரிவித்தார்.