கள போராட்டம் வேறு தனி மரியாதை வேறு! பொன். ராதாவிடம் வாழ்த்து பெற்ற வசந்த்
Mar 18, 2021, 20:26 IST1616079414000
தமிழக சட்டமன்ற தேர்தலோடு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலைப் போலவே இம்முறையும் பாஜக – காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கு அந்த தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. அங்கு பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் மறைந்த எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தும் போட்டியிடுகின்றனர். இதற்காக இருவரும் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்த விஜய் வசந்த் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார். அவரை போன்ற மூத்த அரசியல்வாதியை சந்தித்ததில் மகிழ்ச்சி என விஜய் கூறினார். களத்தில் போராட்டம் இருப்பினும் தனிநபர் மரியாதை என்றும் பேணி காப்போம் என்றும் விஜய் கூறினார்.