ஒடிடியில் க/பெ ரணசிங்கம் படம் ரிலீஸ்: நடிகர் விஜய் சேதுபதி அப்செட்?!

 

ஒடிடியில் க/பெ ரணசிங்கம் படம் ரிலீஸ்: நடிகர் விஜய் சேதுபதி அப்செட்?!

க/பெ ரணசிங்கம் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் நடிகர் விஜய் சேதுபதி அப்செட் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் தியேட்டர்கள் அனைத்தும் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஒடிடியில் வெளியானது. அதனைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா நடித்திருக்கும் சூரரை போற்று திரைப்படமும் ஒடிடியில் வெளியாக உள்ளது. திரைப்படங்களை ஒடிடியில் வெளியிடுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையிலும், சூரரை போற்று ஒடிடியில் வெளியாகும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

ஒடிடியில் க/பெ ரணசிங்கம் படம் ரிலீஸ்: நடிகர் விஜய் சேதுபதி அப்செட்?!

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படமான க/பெ ரணசிங்கம் படம் வரும் அக்டோபர் 2ம் தேதி ஒடிடியில் ரிலீஸ் ஆகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அண்மையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தன் படம் ஒடிடியில் வெளியாவதால் விஜய் சேதுபதி அப்செட் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

ஒடிடியில் க/பெ ரணசிங்கம் படம் ரிலீஸ்: நடிகர் விஜய் சேதுபதி அப்செட்?!

க/பெ ரணசிங்கம் ஒடிடியில் வெளியாகவிருக்கும் செய்தியை அறிந்த உடன் அவர் அப்செட் ஆகி விட்டதாகவும், இதற்கு தியேட்டர்கள் உரிமையாளர்கள் தரப்பில் எந்த வித ரெஸ்பான்ஸ் இருக்கும் என எண்ணி அவர் கவலையடைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பிரபல செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.