இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல… கண்ணீர் சிந்திய விஜய் சேதுபதி!

 

இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல… கண்ணீர் சிந்திய விஜய் சேதுபதி!

நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை 4 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் கார்த்திக், சூர்யா, மன்சூர் அலி கான், சூரி, வையாபுரி, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல… கண்ணீர் சிந்திய விஜய் சேதுபதி!

அதே போல நடிகைகள் ஜோதிகா, திரிஷா உள்ளிட்டோரும் விவேக்குடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, ‘2019ல் விவேக் சாருடன் சேர்ந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் பணியாற்றினேன். அவருக்கு மாரடைப்பு என தெரிய வந்த போதும், அவர் மீண்டு வந்து விடுவார் என நம்பினேன். எனக்கும் அவர் வீட்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல… கண்ணீர் சிந்திய விஜய் சேதுபதி!

2004க்கு பிறகு இப்போது தான் அவரது வீட்டுக்கு வருகிறேன். ஆனால், இப்படி ஒரு நிலையில் வருவேன் என எதிர்பார்க்கவில்லை. தங்கமான மனிதன். அவர் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து அவரை மீட்டுக் கொண்டு வந்து விடுவார்கள் என்று நம்பினேன். ஆனால்…’ என்று நா தழுதழுக்க பேசினார்.