“முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பது அவரின் உரிமை” : பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை

 

“முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பது அவரின் உரிமை” : பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை

விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது அவரின் தனிப்பட்ட உரிமை என்று பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

“முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பது அவரின் உரிமை” : பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதில் எந்த தவறும் இல்லை. திரை கலைஞர்களுக்கு தாங்கள் எந்த படத்தில் நடிக்க வேண்டும் என முடிவெடுக்கும் உரிமை உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் அரசியலை கலப்பது சரியல்ல என்றார். தொடர்ந்து பேசியுள்ள அவர், சட்ட பேரவை தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். தமிழகத்தில் பாஜக 60 இடங்களில் வெற்றி பெறும் சூழல் இருக்கிறது என்று தலைவர் முருகன் தெரிவித்தார். ஆனால் பாஜக 60 சீட்டுகளை கேட்பதாக சித்தரிக்கின்றனர் என்றும் விளக்கமளித்தார்.

“முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பது அவரின் உரிமை” : பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை

இதனிடையே விஜய் சேதுபதி கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் தமிழ் இனத்திற்கு துரோகம் விளைவித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்ட முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.