கொரோனா காலத்தில் ஊழல் செய்யும் சில கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வா தலைவா! விஜய்யை அழைக்கும் ரசிகர்கள்

 

கொரோனா காலத்தில் ஊழல் செய்யும் சில கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வா தலைவா! விஜய்யை அழைக்கும் ரசிகர்கள்

நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் விதமாக அவரது ரசிகர்கள் மீண்டும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதா உருவத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவையும், எம்ஜிஆர் உருவத்தில் விஜய்யையும் எடிட் செய்து போஸ்டர் ஓட்டப்பட்டு இருந்தது. விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு விஜய் ரசிகர் மன்றம் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து விவேகானந்தரை போல விஜய்யை சித்தரித்து போஸ்டர் ஒட்டியதால் மீண்டும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து 2021இல் தமிழகத்திற்கு தலைமை ஏற்க வர வேண்டும் 2ஆம் புரட்சி தலைவரே’ என குறிப்பிட்டு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜிஆர் கெட் அப்பில் விஜய்யின் உருவத்தை சித்தரித்து தேனியில் போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது போன்ற போஸ்டர்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.

கொரோனா காலத்தில் ஊழல் செய்யும் சில கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வா தலைவா! விஜய்யை அழைக்கும் ரசிகர்கள்

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் உள்ள காந்தி சாலை மற்றும் சின்ன சேலம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில், ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில், கொரோனா கால கட்டங்களிலும் ஊழல் செய்து கொண்டிருக்கும் சில கட்சிகளுக்கு முற்று புள்ளி வைக்க வா என் தலைவா என்ற வாசகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டர்கள் ஒட்ட கூடாது என அறிவுறுத்தபட்டிருந்த நிலையில் மீண்டு விஜய் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.