விஜயின் முடிவே எங்கள் முடிவு! எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் இணையமாட்டோம்- விஜய் மக்கள் இயக்கத்தினர்

 

விஜயின் முடிவே எங்கள் முடிவு! எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் இணையமாட்டோம்- விஜய் மக்கள் இயக்கத்தினர்

விஜய் என்ன முடிவெடுக்கிறாரோ அதற்கு தான் கட்டுப்படுவோமே தவிர அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் இணையமாட்டோம் என விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் மக்கள் இயக்கம் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கி உள்ள கட்சியில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் யாரும் சேர மாட்டோம். அந்த கட்சியின் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் பத்மநாபன் திருச்சி ரசிகர்களை அந்த கட்சியில் சேர அழைப்பு விடுக்கிறார். ஆனால் அவர் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டவர் எனவே அவருக்கும் விஜய் மக்கள் இயக்கத்திற்கும் தற்போது எந்த தொடர்பும் இல்லை. அந்த கட்சியில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இணைய கூடாது என தெரியப்படுத்தவே இந்த கூட்டம் நடைபெறுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விஜயின் முடிவே எங்கள் முடிவு! எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் இணையமாட்டோம்- விஜய் மக்கள் இயக்கத்தினர்

எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கி உள்ள கட்சியில் இணையலாம் என விஜய் அறிவித்தால் மட்டுமே நாங்கள் அதில் இணைவோம் என்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து விஜய் என்ன முடிவெடுக்கிறாரோ அதற்கு முழுமையாக கட்டுப்பட்டு அவருக்கு ஆதரவு அளிப்போம் என்றும் ரசிகர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். விரைவில் தான் அரசியலுக்கு வருவது குறித்து அறிவிப்பேன் என்றும், அதுவரை எஸ்.ஏ.சந்திரசேகரோடு இணைந்து செயல்பட வேண்டும் எனவும் விஜய் கூறினால் நிச்சயம் அதற்கு அனைவரும் கட்டுப்படுவோம் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.