’’புரட்சித்தலைவரே…’’-கடலூரிலும் பிரச்சனையை தொடங்கும் விஜய் ரசிகர்கள்!

 

’’புரட்சித்தலைவரே…’’-கடலூரிலும் பிரச்சனையை தொடங்கும் விஜய் ரசிகர்கள்!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப்போலவே விஜய்யும் ஆட்சியைப்பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் அவரது ரசிகர்கள். இதற்காகவே, விஜய்யை இரண்டாவது புரட்சித்தலைவராக தொடர்ந்து சித்தரித்து வருகின்றார்கள். ’‘இரண்டாம் புரட்சித்தலைவரே…’’தேனியில் ஒட்டிய போஸ்டர் பெரும் சர்ச்சையை எழுப்ப, அதிமுக அமைச்சர்கள் கவனத்திற்கும் சென்று கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

’’புரட்சித்தலைவரே…’’-கடலூரிலும் பிரச்சனையை தொடங்கும் விஜய் ரசிகர்கள்!

மதுரையிலும், எம்.ஜி.ஆரின் உருவத்தில் விஜய்யின் தலையினை வைத்து போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். இன்னும் கொஞ்சம் மேலே போய், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருப்பதுபோல், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள். பெரும் சர்ச்சைக்குள்ளான பின்னர் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

’’புரட்சித்தலைவரே…’’-கடலூரிலும் பிரச்சனையை தொடங்கும் விஜய் ரசிகர்கள்!

இந்த சர்ச்சை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், மீண்டும் அதே பிரச்சனையை தொடங்கி இருக்கிறார்கள் கடலூ மாவட்ட விஜய் ரசிகர்கள்.

’’புரட்சித்தலைவரே…’’-கடலூரிலும் பிரச்சனையை தொடங்கும் விஜய் ரசிகர்கள்!

கடலூர் மாவட்டத்தின் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் விஜய்யின் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்ரை போல சித்தரித்து விஜய் சுவரோட்டி ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளில், ’’புரட்சித்தலைவரே… வாத்தியாரே… வருக வெல்க ’’என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியில் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயர் மட்டும் அச்சிடப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் பெயர் எதுவும் இல்லை.

கைது செய்யப்படுவோம் என்பதை உணர்ந்தே, பெயரை அச்சிடாமல் போஸ்டர் அடித்திருக்கிறார்கள்.