முதல்வர் பரப்புரையில் கேட்ட விஜய் ரசிகர் குரல்….பூரிப்பில் எடப்பாடி பழனிசாமி

 

முதல்வர் பரப்புரையில் கேட்ட விஜய் ரசிகர் குரல்….பூரிப்பில் எடப்பாடி பழனிசாமி

விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆதரவு தருவதாக தெரிவித்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

முதல்வர் பரப்புரையில் கேட்ட விஜய் ரசிகர் குரல்….பூரிப்பில் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி நேற்று சேலம் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டாலும் சேலம் தொகுதியில் பேசுவதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. உங்கள் வீட்டில் இருந்த ஒருவன் முதல்வராக உள்ளேன். என்னை மீண்டும் முதல்வராக மாற்றுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த வெற்றி அமைய வேண்டும். தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி எடப்பாடி என்ற பெருமையை பெற்று தாருங்கள். நான் இங்கு 65 ஆவது முறையாக வந்துள்ளேன். யாரும் சொந்த தொகுதிக்கு இத்தனை முறை வரமாட்டார்கள்”என்றார்.

முதல்வர் பரப்புரையில் கேட்ட விஜய் ரசிகர் குரல்….பூரிப்பில் எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசிய அவர், “மு.க.ஸ்டாலினை போல் மற்றவர்கள் பேச்சை நான் கேட்பதில்லை. நான் எந்த யோசனையில் தான் எல்லாவற்றையும் செய்கிறேன்” என்றார். முதல்வர் தொடர்ந்து பேசி கொண்டிருக்கும் போது, நான் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஆதரவு தருகிறேன் என்று கூறினார். இதை கேட்ட முதல்வர் புன்னகை செய்துவிட்டு ரொம்ப நன்றி என்று தெரிவித்தார்.