நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சோதனை; ரூ.7.85 லட்சம் பறிமுதல்
Nov 12, 2020, 19:21 IST1605189067000
தர்மபுரி
தர்மபுரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 7 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மற்றும் தரக்கட்டுப்பாடு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பதுறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேரம் நீடித்த இந்த சோதனையில் கணக்கில் வராத 7 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, கோட்ட பொறியாளர் தனசேகரன் மற்றும் 5 உதவி பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடந்து விசாரணை செய்து வருகின்றனர்.