நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சோதனை; ரூ.7.85 லட்சம் பறிமுதல்

 

நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சோதனை; ரூ.7.85 லட்சம் பறிமுதல்

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 7 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மற்றும் தரக்கட்டுப்பாடு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சோதனை; ரூ.7.85 லட்சம் பறிமுதல்

இங்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பதுறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேரம் நீடித்த இந்த சோதனையில் கணக்கில் வராத 7 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, கோட்ட பொறியாளர் தனசேகரன் மற்றும் 5 உதவி பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடந்து விசாரணை செய்து வருகின்றனர்.