சேலத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

 

சேலத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

சேலம்

சேலத்தில் உள்ள வட்டார போக்குவரத்து பெண் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விருதுநகர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கலைச்செல்வியின் காரில் இருந்த 24 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 117 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

இதுதொடர்பாக, கலைச்செல்வி மற்றும் மதுரை வடக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் ஆகியோரிடம், லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, இன்று சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அடுத்த பூவானூரில் உள்ள கலைச்செல்வியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நிறைவடைந்த பிறகே பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் குறித்த விபரம் தெரியவரும்.