இது 2020, 1962 அல்ல என்பதை சீனா மறந்து விடக்கூடாது… பிரசன்னா ஆச்சார்யா எச்சரிக்கை

 

இது 2020, 1962 அல்ல என்பதை சீனா மறந்து விடக்கூடாது… பிரசன்னா ஆச்சார்யா எச்சரிக்கை

இது 2020, 1962 அல்ல என்பதை சீனா மறந்து விடக்கூடாது என்று எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் அந்நாட்டுக்கு பிரசன்னா ஆச்சார்யா எச்சரிக்கை விடுத்தார்.

லடாக்கின் சுமரின் பொதுவான பகுதியில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்து அவர்களை விரட்டியடித்தனர். இந்நிலையில் பிஜூ ஜனதா தள கட்சியின் துணை தலைரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிரசன்னா ஆச்சார்யா சீன அரசுக்கும், அந்நாட்டின் ராணுவத்துக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரசன்னா ஆச்சார்யா இது தொடர்பாக கூறியதாவது:

இது 2020, 1962 அல்ல என்பதை சீனா மறந்து விடக்கூடாது… பிரசன்னா ஆச்சார்யா எச்சரிக்கை
பிரசன்னா ஆச்சார்யா

சீன ராணுவத்தின் சதி திட்டத்தை அவர்கள் தொடர்ந்து முறியடிப்பது இந்திய ராணுவத்தின் துணிச்சலாகும். ஆனால் சீன அரசாங்கம் மற்றும் அதன் மக்கள் விடுதலை ராணுவத்தின் மனநிலை மகிவும் ஆபத்தானது, விரிவாக்கம் மனிநிலை கொண்டது. சீனா மற்றவர்களின் குறிப்பாக இந்தியாவின் நிலத்தை கைப்பற்ற விரும்புகிறது. ஆனால் இது 2020 மற்றும் 1962 அல்ல என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது.

இது 2020, 1962 அல்ல என்பதை சீனா மறந்து விடக்கூடாது… பிரசன்னா ஆச்சார்யா எச்சரிக்கை
சீன ராணுவ வீரர்கள்

1962ம் ஆண்டு நிலவரத்துக்கும் இப்போதுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் ராணுவம் மற்றும் ராஜதந்திரம் உள்பட பல்வேறு விவகாரங்களில் இந்தியா கணிசமான வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவால் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க முடியும், சீன அரசு அதனை தெரிந்து கொள்ள வேண்டும். எல்லையை பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியா இன்னும் தீர்க்கமாக இருக்க வேண்டும். அண்டை நாடுகளான நேபாளம் போன்றவற்றுடன் நாட்டின் உறவை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.