முகக் கவசம் அணிந்தால் மட்டுமே அத்தியாவசிய பொருள்… வணிகர்களுக்கு ராமதாஸ் கோரிக்கை

 

முகக் கவசம் அணிந்தால் மட்டுமே அத்தியாவசிய பொருள்… வணிகர்களுக்கு ராமதாஸ் கோரிக்கை

முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே காய்கறி, மளிகைப் பொருள் விற்பனை செய்ய வணிகர்கள் முன்வர வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

முகக் கவசம் அணிந்தால் மட்டுமே அத்தியாவசிய பொருள்… வணிகர்களுக்கு ராமதாஸ் கோரிக்கை

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீடில், “முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டும் தான் இனி எரிபொருட்கள் வழங்கப்படும் என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் பங்களிப்பது பாராட்டத்தக்கது; அவசியமானது!

தமிழ்நாட்டில் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவற்றிலும் இத்தகைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டும் தான் பொருட்கள் வழங்கப்படும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். இதற்கு வணிகர்கள் முன்வர வேண்டும்!” என்று கூறியுள்ளார்.