‘200 தொகுதிகளுக்கு மேல் திமுக ஜெயிக்கும்’.. அடித்துச் சொல்லும் வேல்முருகன்

 

‘200 தொகுதிகளுக்கு மேல் திமுக ஜெயிக்கும்’.. அடித்துச் சொல்லும் வேல்முருகன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி வேட்பாளருமான வேல்முருகன், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும். அடுத்த ஆட்சி திமுகவுடையது தான். இதை நான் சொல்லவில்லை. அதிகாரிகள் சொல்கிறார்கள். ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும் என்று கூறினார்.

‘200 தொகுதிகளுக்கு மேல் திமுக ஜெயிக்கும்’.. அடித்துச் சொல்லும் வேல்முருகன்

இதைத்தொடர்ந்து அரக்கோணம் இரட்டைக் கொலை குறித்து பேசிய வேல்முருகன், அரக்கோணம் கொலையை நியாயப்படுத்த முடியாது. அந்த சம்பவம் குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவில் பொறுப்பில் இருப்பவர்களின் மகன்கள் தான் முக்கிய குற்றவாளிகள். அதன் பின்னணியில் அதிமுக தான் இருக்கிறது. கொலையாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அரக்கோணம், சோகனூர் அருகே தேர்தல் முன்விரோத தகராறில் சூர்யா, அர்ஜுனன் ஆகிய 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் இச்சம்பவத்துக்கு கண்டனக் குரல்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.