தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது- வேல்முருகன் அதிரடி

 

தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது- வேல்முருகன் அதிரடி

தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் போட்டியிட்டார். பண்ருட்டி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது- வேல்முருகன் அதிரடி

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உயரதிகாரிகள் செயல்படுகின்றனர். பண்ருட்டி,நெய்வேலி சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமான அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக செய்யப்பட்டுள்ளன. கல்லூரி வளாகத்தில் மர்ம நபர்களின் நடமாட்டம் தொடர்கிறது.

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்துக்குள் கணினி நிபுணர்கள் வந்து செல்ல திடீர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் பாடம் நடத்த 3 கணினி நிபுணர்கள் அனுமதித்து உள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது. கணினி நிபுணர்கள் அனுமதித்தது பற்றி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார் அளித்துளேன். தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் புகாரை அனுப்பியுள்ளேன். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டும். ” என தெரிவித்தார்