ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்; காவல் நிலையத்தில் இளம்பெண் தர்ணா

 

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்; காவல் நிலையத்தில் இளம்பெண் தர்ணா

வேலூர்

வேலூர் அருகே மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைதுசெய்யக் கோரி, இளம்பெண் ஒருவர் காவல்நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வேலூர் விருதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் புனிதா(28). திருமணமாகிய இவர், காந்திநகர் பகுதியில் இயங்கி வரும் ஷாப்பிங் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார்.

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்; காவல் நிலையத்தில் இளம்பெண் தர்ணா

இந்நிலையில், கடை உரிமையாளர் ரால்ஸ்டன் கருணாகரன் என்பவர், புனிதாவுக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்ததுடன், அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, நேற்று கருணாகரனை கைதுசெய்யக் கோரி, புனிதா விருதம்பட்டு காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.