வேகமெடுக்கும் கொரோனா: வேலூரில் மேலும் ஒரு மாதம் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!

 

வேகமெடுக்கும் கொரோனா: வேலூரில் மேலும் ஒரு மாதம் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!

வேலூரில் நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது.

வேகமெடுக்கும் கொரோனா: வேலூரில் மேலும் ஒரு மாதம் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இறைச்சி கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே செயல்படும். துணிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியவை ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி, ஆகிய 4 நாட்கள் செயல்படும். மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து நாட்களும் வழக்கம்போல் இயங்கும். ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் வேலூர் மாவட்டத்தில் தொடரும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.