வேலூரில் அதிகரிக்கும் கொரோனா : இன்றுடன் மொத்த பாதிப்பு 5,757 ஆக அதிகரிப்பு!
Jul 30, 2020, 09:01 IST1596079861000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,426 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 97,575 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் வேலூரில் மேலும் 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,757 ஆக அதிகரித்துள்ளது.