பிற மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா : வேலூரில் 6 ஆயிரத்தை கடந்தது தொற்று!
Aug 1, 2020, 09:12 IST1596253350000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 99,794 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வேலூரில் மேலும் 212 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 6,180 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வேலூரில் உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ள நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,863 ஆக உயர்ந்துள்ளது.