வேலூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்தை எட்டியது கொரோனா பாதிப்பு!

 

வேலூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்தை எட்டியது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,807 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,714 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 84,598 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாக மாநகராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, சென்னையில் இருந்து சென்றவர்கள் மூலமாக சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்தை எட்டியது கொரோனா பாதிப்பு!

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தில் மேலும் 190 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,057 ஆக அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 33 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 2,313 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.