வேலூரில் 7 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று : விழுப்புரத்திலும் 2 மருத்துவர்கள் உள்பட மேலும் 67 பேருக்கு கொரோனா!

 

வேலூரில் 7 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று : விழுப்புரத்திலும்  2 மருத்துவர்கள் உள்பட மேலும் 67 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,175 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,73, 460 ஆக அதிகரித்துள்ளது.

வேலூரில் 7 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று : விழுப்புரத்திலும்  2 மருத்துவர்கள் உள்பட மேலும் 67 பேருக்கு கொரோனா!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 5ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

வேலூரில் 7 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று : விழுப்புரத்திலும்  2 மருத்துவர்கள் உள்பட மேலும் 67 பேருக்கு கொரோனா!

இந்நிலையில் வேலூரில் மேலும் 199 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 7,004 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் 2 மருத்துவர்கள் உள்பட மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; பாதிப்பு எண்ணிக்கை 4,306 ஆக அதிகரித்துள்ளது.