அறுந்துகிடந்த மின்கம்பி உரசியதில், பற்றி எரிந்த ஆட்டோ

 

அறுந்துகிடந்த மின்கம்பி உரசியதில், பற்றி எரிந்த ஆட்டோ

வேலூர்

வேலூரில் சாலையில் விழுந்த மரத்தின் அடியில் சிக்கிய ஆட்டோ, மின்கம்பி உரசியதால் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் அடுத்த சாயிநாதபுரம் முதலியார் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் தருண். இவர், அங்குள்ள உணவகத்தின் அருகே தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக புளியமரம் சாலையில் சரிந்து விழுந்தது. இதில், மரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட அந்த ஆட்டோவை தருண் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்க முயன்றனர். அப்போது, அங்கு அறுந்துகிடந்த மின்கம்பி உரசியதில், ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

அறுந்துகிடந்த மின்கம்பி உரசியதில், பற்றி எரிந்த ஆட்டோ

இதனால் அதிர்ச்சியடைந்த தருண் அங்கிருந்து விலகிச் சென்றார். இதுகுறித்து அந்தபகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், மின்சார இணைப்பை துண்டித்துவிட்டு, தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் ஆட்டோ முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.