வேலூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,968 ஆக அதிகரிப்பு : விழுப்புரத்திலும் வேகம் எடுக்கும் தொற்று!

 

வேலூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,968 ஆக அதிகரிப்பு : விழுப்புரத்திலும் வேகம் எடுக்கும் தொற்று!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,864 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,39,,978 ஆக அதிகரித்துள்ளது.

 

வேலூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,968 ஆக அதிகரிப்பு : விழுப்புரத்திலும் வேகம் எடுக்கும் தொற்று!
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 98,767பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

வேலூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,968 ஆக அதிகரிப்பு : விழுப்புரத்திலும் வேகம் எடுக்கும் தொற்று!

இந்நிலையில் வேலூரில் மேலும் 211 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,968 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் மேலும் 78 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 3,672 ஆக உயர்ந்துள்ளது.