வேலூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,558 ஆக உயர்வு : திருப்பத்தூரில் ஆயிரத்தை தாண்டிய தொற்று!

 

வேலூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,558 ஆக உயர்வு : திருப்பத்தூரில் ஆயிரத்தை தாண்டிய தொற்று!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,972பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.

வேலூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,558 ஆக உயர்வு : திருப்பத்தூரில் ஆயிரத்தை தாண்டிய தொற்று!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 96,438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதூம் ஊரடங்கு அமலில் உள்ளது.

வேலூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,558 ஆக உயர்வு : திருப்பத்தூரில் ஆயிரத்தை தாண்டிய தொற்று!

இந்நிலையில் வேலூரில் மேலும் 126 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,558 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் திருப்பத்தூரில் மேலும் 57 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அங்கு தொற்று பாதிப்பு 1013 ஆக அதிகரித்துள்ளது.