வேலை வாங்கி தருவதாக மோசடி – ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

 

வேலை வாங்கி தருவதாக மோசடி – ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

வேலூர்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி தொடர்ந்து பலரை ஏமாற்றி பணம் பறித்து வந்த நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலை வாங்கி தருவதாக மோசடி – ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூரை சேர்ந்த அனிதா என்பவரிடம், சிஎம்சி மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி, மெல்மொணவூர் பகுதியை சேர்ந்த உதயகுமார் (27) 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நேற்று உதயகுமாரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

வேலை வாங்கி தருவதாக மோசடி – ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

மேலும் அவர் இதேபோன்று சிஎம்சி மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக பலரை ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மேலும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்கும் பொருட்டு, வேலூர் மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, உதயகுமாரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.