தமிழ்நாடு வணிகர் சங்கபேரவை தலைவர் வெள்ளையனுக்கு கொரோனா பாதிப்பு

 

தமிழ்நாடு வணிகர் சங்கபேரவை தலைவர் வெள்ளையனுக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 1,384பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கபேரவை தலைவர் வெள்ளையனுக்கு கொரோனா பாதிப்பு

இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கபேரவை தலைவர் வெள்ளையனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிண்டி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.