“கூட்டணி வேறு,கொள்கைகள் வேறு” ; நவம்பர் 17 முதல் வேல் யாத்திரை தொடரும் : எல்.முருகன்

 

“கூட்டணி வேறு,கொள்கைகள் வேறு” ; நவம்பர் 17 முதல் வேல் யாத்திரை தொடரும் : எல்.முருகன்

எவ்வளவு தடங்கல் வந்தாலும், வருகிற 17ஆம் தேதி முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடரும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

“கூட்டணி வேறு,கொள்கைகள் வேறு” ; நவம்பர் 17 முதல் வேல் யாத்திரை தொடரும் : எல்.முருகன்

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல். முருகன்,”வரும் 17ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும். எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரையை டிச.6ல் திருச்செந்தூரில் நிறைவு செய்வோம் . வேல் யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டணி வேறு,கொள்கைகள் வேறு; எங்கள் கொள்கைக்கு ஏற்றாற்போல நாங்கள் நடத்துகிறோம்.சாலையில் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அரசு முன்னெச்சரிக்கை கைது செய்வதை ஏற்க முடியாது. முன்கள பணியாளர்களை பாராட்ட மத்திய அரசின் திட்டங்களை பற்றி பேசுவதே வேல் யாத்திரை. தமிழக அரசு ஏன் எங்கள் யாத்திரையை தடுக்கிறது என தெரியவில்லை. எமர்ஜென்சியை பார்த்த கட்சி பாஜக; எந்த தடையையும் எதிர்கொள்வோம்”என்றார்.

“கூட்டணி வேறு,கொள்கைகள் வேறு” ; நவம்பர் 17 முதல் வேல் யாத்திரை தொடரும் : எல்.முருகன்

முன்னதாக பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் தடையை மீறி அக்கட்சியினர் வேல் யாத்திரையை நடத்தினர். இதனால் தமிழக அரசு மறுஉத்தரவு வரும் வரை தமிழகத்தில் மத, அரசியல், கல்வி, சமூக கூட்டங்கள் நடத்த விதித்துள்ள தடை தொடரும் என அறிவித்துள்ளது.