“வேல் யாத்திரையில் முதல்வர் ” : டிச.7ல் திருச்செந்தூரில் நிறைவு பெறும் என அறிவிப்பு!

 

“வேல் யாத்திரையில் முதல்வர் ” : டிச.7ல் திருச்செந்தூரில் நிறைவு பெறும் என அறிவிப்பு!

வேல் யாத்திரை டிசம்பர் 7ல் திருச்செந்தூரில் நிறைவுபெறுகிறது என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

“வேல் யாத்திரையில் முதல்வர் ” : டிச.7ல் திருச்செந்தூரில் நிறைவு பெறும் என அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் தமிழகத்தில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழக அரசு வேல் யாத்திரைக்கு தடை விதித்தது.

“வேல் யாத்திரையில் முதல்வர் ” : டிச.7ல் திருச்செந்தூரில் நிறைவு பெறும் என அறிவிப்பு!

இருப்பினும் கடந்த மாதம் 6 ஆம் தேதி தடையை மீறி பாஜகவின் எல். முருகன் திருத்தணியில் யாத்திரையை தொடங்கினார். இதனால் பாஜகவினர் 300ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்து விடுவிக்கப்பட்டனர். இப்படி தொடர்ந்து தடையை மீறி யாத்திரையை நடத்தி வந்த பாஜகவினர் புயல் காரணமாக அதை பாதியில் நிறுத்தினர்.

“வேல் யாத்திரையில் முதல்வர் ” : டிச.7ல் திருச்செந்தூரில் நிறைவு பெறும் என அறிவிப்பு!

இந்நிலையில் டிசம்பர் 7ல் திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவுபெறுகிறது என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார் . திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு விழாவில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்கிறார் என்றும் டிசம்பர் 5ல் சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை ,திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்தபின் டிசம்பரில் திருச்செந்தூரில் முடிவடைகிறது என முருகன் அறிவித்துள்ளார்.