தடையை மீறி விநாயகர் சிலை வாங்க சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்!
Aug 20, 2020, 07:42 IST1597889571000
கொரோனா பரவல் காரணமாக பொதுமக்களின் நலன்கருதி ஆகஸ்ட் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்றும் ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் தடையை மீறி விநாயகர் சிலையை நிறுவுவோம் என்றும் அறைகூவல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தடையை மீறி விநாயகர் சிலை வாங்க சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அம்மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் விநாயகர் சிலையை நிறுவ, ஊர்வலமாக எடுத்து செல்ல வாகனங்களை கொண்டு சென்றாலும் பறிமுதல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்