“திருச்சியில் நவ.24 முதல் காய்கறி விற்பனை நடைபெறாது” – வியாபாரிகள் சங்கம்

 

“திருச்சியில் நவ.24 முதல் காய்கறி விற்பனை நடைபெறாது” – வியாபாரிகள் சங்கம்

திருச்சி

திருச்சி காந்தி மார்கெட் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் 27 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜுலு, வரும் 26 ஆம் தேதி காந்தி மார்கெட் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், மார்கெட்டை திறக்க கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வரும் 24 ஆம் தேதி மாலை முதல் திருச்சி மாவட்டம் முழுவதும் காய்கறிகள் விற்பனை செய்யமாட்டோம் என தெரிவித்தார்.

“திருச்சியில் நவ.24 முதல் காய்கறி விற்பனை நடைபெறாது” – வியாபாரிகள் சங்கம்

மேலும் வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும்பட்சத்தில் வரும் 27 ஆம் தேதி காந்தி மார்கெட்டில் வியாபாரம் நடைபெறும் என்று தெரிவித்த அவர், தீர்ப்பு சாதகமாக இல்லாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.