கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!

 

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!

ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய், விலை 90 ஆக அதிகரித்துள்ளது. குடை மிளகாய் 30லிருந்து 50 ரூபாயாகவும், கத்தரிக்காய் 25 லிருந்து ரூ. 60 ஆகவும், பீன்ஸ் 20லிருந்து ரூ.50 ஆகவும் உயர்ந்துள்ளது. தொடர் மழை மற்றும் நாளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வார விடுமுறை என்பதால் காய்கறிகளின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!

நிவர் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்த நிலையில் காய்கறி வரத்து குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி புயல் காரணமாக மக்கள் அனைவரும் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை ஏற்கனவே சேமித்து வைத்து விட்டனர். இதனால் காய்கறிகளின் இருப்பு குறைந்துள்ளதால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அது நிரந்தரம் இல்லை எனவும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த விலை ஏற்றம் சாதாரண நிலைக்கு வந்துவிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.