“குரூப் 1 தேர்வில் முறைகேடுகளை தடுக்க, விடைத்தாளில் பல்வேறு மாற்றங்கள்” – டிஎன்பிஎஸ்சி தலைவர்

 

“குரூப் 1 தேர்வில் முறைகேடுகளை தடுக்க,  விடைத்தாளில் பல்வேறு மாற்றங்கள்” – டிஎன்பிஎஸ்சி தலைவர்

குரூப் 1 தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க ஓ.எம்.ஆர். விடைத்தாள்களில் பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்டு உள்ளதாக, டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். கோவை சித்தாபுத்தூர் மாநகராட்சி பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் ஆய்வுமேற்கொண்ட பின் பாலச்சந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“குரூப் 1 தேர்வில் முறைகேடுகளை தடுக்க,  விடைத்தாளில் பல்வேறு மாற்றங்கள்” – டிஎன்பிஎஸ்சி தலைவர்

அப்போது, “இதற்கு முன்னர் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளை முழுமையாக அறிந்து, அதன் அடிப்படையில் ஓ.எம்.ஆர். ஷீட்டுகளில் பல்வேறு புதிய முறைகள் புகுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுதப்படும்போது, தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பானது தேர்வு மையங்களிலேயே தனியாக பிரிக்கப்பட்டு, தேர்வு விடைத்தாள் மட்டுமே தனியாக வேறொரு கவர்களில் வைக்கப்படும். யாராவது வழியிலேயே ஓ.எம்.ஆர்., ஷீட்டுகளை மாற்ற முடியாத படி, ஓ.எம்.ஆர்., ஷீட் மாற்றி அமைக்கப்படும்” என்று கூறினார்.

“குரூப் 1 தேர்வில் முறைகேடுகளை தடுக்க,  விடைத்தாளில் பல்வேறு மாற்றங்கள்” – டிஎன்பிஎஸ்சி தலைவர்

“இதற்கு முன்னர் ஓ.எம்.ஆர்., ஷீட்களின் பட்டியலின் மேற்பகுதியில் உள்ள விவரங்கள் ஷீட்களின் ஓரப்பகுதியில் கொண்டுவரப்பட்டு, அதை கிழித்து வைக்கும்படி செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் எழுதி முடித்த பிறகு, எத்தனை ஏ,பி,சி,டி என்ற விவரத்தை அந்த தேர்வர்கள் முன்னியிலேயே சரிபார்த்து கண்காணிப்பு அலுவலர்கள் கையெழுத்திடும், புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளோம்” என்றும் கூறினார். “இதன் மூலம், அழிகிற மையினால் தேர்வை எழுதிவிட்டு, வழியிலேயே அந்த மையை புதிதாக மாற்ற முடியாது. மேலும், புதிதாக கருப்பு பேனாவால் மட்டுமே எழுத வேண்டும் என்ற நடைமுறையையும் கொண்டு வந்துள்ளோம்” என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

“குரூப் 1 தேர்வில் முறைகேடுகளை தடுக்க,  விடைத்தாளில் பல்வேறு மாற்றங்கள்” – டிஎன்பிஎஸ்சி தலைவர்

“கூடுதலாக 15 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கி, தேர்வர்களும், கண்காணிப்பு அலுவலர்களும் சரிபார்த்து சில விவரங்களை கொடுக்க வழங்கி உள்ளோம். தவிர, கேள்விகள் தவறு என்கிற பட்சத்தில் புதிதாக இ என்ற குறிப்பை கருமையாக்கினால் முழு மதிப்பெண் வழங்கும் வகையிலும், 200 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் போன்ற புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளோம்” என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

“குரூப் 1 தேர்வில் முறைகேடுகளை தடுக்க,  விடைத்தாளில் பல்வேறு மாற்றங்கள்” – டிஎன்பிஎஸ்சி தலைவர்

அத்துடன், ஓ.எம்.ஆர்., தான் பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமாக இருப்பதால், தேர்வர்களின் கட்ட விரல் ரேகை பெறப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு தேர்வர்களுக்கும் வெவ்வேறு விதமான சீரியல் எண் கொண்ட கேள்வி தாள்கள் வழங்கப்பட்டுள்ளது, என்றும் தெரிவித்தார்.