வாராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை!

 

வாராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை!

பஞ்சமி என்பது வாராஹியை குறிக்கும் பெயர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்ரஹித்தல் எனும் ஐந்தொழில்களில் அனுக்ரஹமே வாராஹியின் தொழில். வாராஹியை நினைத்து விரதமிருந்தால் வளமையும், செழுமையும், மகிழ்ச்சியும் நம்மை வந்து சேரும்.

ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.

வாராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை!

முதலாம் நாள் இந்திரா தேவி (இந்திரானி)
இரண்டாம் நாள் ப்ரம்ம தேவி (ப்ராஹ்மி)
மூன்றாம் நாள் விஷ்ணு தேவி (வைஷ்ணவி)
நான்காம் நாள் சிவ தேவி (மகேஸ்வரி)
ஐந்தாம் நாள் குமார தேவி (கௌமாரி)
ஆறாம் நாள் ருத்ர தேவி (காளி சாமுண்டா)
ஏழாம் நாள் சாகம்பரி தேவி
எட்டாம் நாள் வராஹி தேவி
ஒன்பதாம் நாள் லலிதா பரமேஸ்வரி

சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும்.
சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும்.

இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது. ஒன்று காசி மற்றொன்று தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ளது. இங்குள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படைத்தளபதி ஆவாள். ராஜராஜசோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். இதனால் இந்த அம்மனை’ ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம் என்று வர்ணிப்பர். தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராகி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர். மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையும் தஞ்சைப்பெரியகோயிலில் உண்டு. எந்த வழிபாட்டை தொடங்கினாலும், முதலில் விநாயகரை வணங்குவதே மரபு. இங்கு சிவவழிபாட்டைத் தொடங்குபவர்கள் விநாயகருக்குப் பதிலாக வராகியம்மனை வழிபட்டே தொடங்குகிறார்கள். சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராகிக்கு சன்னதி உள்ளது.

வாராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை!

கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. இங்கு என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமணவரம் உடனே கைகூடுகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இத்தலத்து அம்பிகையிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.
வாராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வாராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை.

வாராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வாராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. வாராஹி மனித உடலும், வராஹ (பன்றி) முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர (காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதமாகும். இவளுக்கு பல நாமங்கள் உள்ளன. சேனநாதா, தண்டநாதா, வாராஹி, பஞ்சமீ, கைவல்யரூபி, வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி (நீதி தேவதை – ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி (வடிவம்), பலிதேவதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, மகாசேனா, அரிக்னீ, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீ. இந்த தேவியே பகளாமுகி என்றும், உரைப்பர்.

வாராஹி ஸ்வரூபத்தில் ஸ்வப்ன வாராஹி, அஷ்வாரூட வாராஹி, ஆதி வாராஹி, லகு வாராஹி என பல உள்ளன. அவள் பல வண்ண உடைகள் அணிபவள் ஒவ்வொரு வாராஹியும் நீலம், சிவப்பு, மஞ்சள் என்று பல உடைகள், பல ஆயுதங்கள். வாராஹம் என்றால் என்ன? பன்றி தானே, வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வாராஹி தான். என்ன உதவி தெரியுமா ? பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன் மூக்கி நுனியில் (அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி) வைக்க வேண்டும். ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை (இயற்கையை) மாற்ற முடியாதல்லவா. ஆக அந்த உந்துதலுக்கு (உயர்த்துதலுக்கு) உதவியவள் தான் வாராஹி. ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.

சரி அங்கே உந்துதல், தூக்கி உயர்த்துதல் எல்லாம் சரி, நாம் மக்கள் ஏன் அவளை வணங்க வேண்டும்? நம்முடைய எதை அன்னை உயரத்தி தூக்க வேண்டும்? என்றால் பணமா, புகழா, அந்தஸ்தா என்றால் இல்லை அதற்கான விடை தான் மிக மிக நுட்பமானது. ஆம் நம்முடைய குண்டலினியை (உயிர் சக்தியை) உயர்த்துபவளே வாராஹி` இன்னும் இருக்கிறதே அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம். அவள் கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பையும் (ஏர்) மற்றும் தண்டம்? கலப்பையின் வேலை என்ன மண்ணின் அடியில் (ஆழத்தில்) இருப்பதை எடுப்பதற்கு தானே, கிழங்கு முதலானவை எடுக்க, நிலத்தை சீர் செய்ய, அது போல் நாம் பாவம் செய்ய செய்ய அவை பதிவுகளாகி (இப்பிறவி என்று இல்லை கர்ம பயன்களும்- வினைப்பயன்) என கர்ம மணல்பரப்பின் உள்ளே ஆழத்தில் உள்ள கிழங்கான குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை.

வாராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை!

எழுந்த குண்டலினி மேல் வரவேண்டுமே அதற்கு தான் அதை தட்டி உயர்த்த கோல் (தண்டம்) ஏந்தியவள் அன்னை. அன்னை லலிதையின் பிருஷ்ட (பின்) பாகத்தில் இருந்து தோன்றியவளாம். ஆம் மூலாதாரம் இருக்கும் இடம், ஆக சரி தானே அன்னையின் வடிவமும், அமைப்பும் ஆயுதங்களும். சரி குண்டலினி மேலேழுந்தால் என்ன லாபம்? என்றால் உண்மையாக குண்டலினியை ஆக்கினையில் வைத்து தவம் செய்ய செய்ய எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும் (வாராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும்), எதிரிகள் குறைவார்கள் (அவர்களும் நம் நண்பர்களாகி விடுவர் – வாராஹி வழிபாடு எதிரிகளை வெல்லுவது) ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. மேலும் குண்டலினி உயர்ந்தால் உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது
வாராஹிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்.

இப்படி வாராஹி வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். ஆனால் ஒரு விஷயம் வாராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி
ஓம் குண்டலினி புரவாசினி
சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்யமனோன்மணி
வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி
அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி
வாராஹீ நமோஸ்துதே!
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
வராஹி மூல மந்திரம்
1)ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
2)ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
3)ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
4) செல்வம் பெருக
ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவியை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
மூலம்:-
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா II
காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
ஸ்ரீ வாராஹி மாலை

வாராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை!
  1. வசீகரணம் (தியானம்)
    இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
    குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
    திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
    மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.
  2. காட்சி (யந்த்ர ஆவாஹனம்)
    தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
    ஈராறிதழ்இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே
    ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்
    வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.
  3. பகை தடுப்பு (பிரதாபம்)
    மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
    கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
    வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்
    பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.
  4. மயக்கு (தண்டினி தியானம்)
    படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
    அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
    குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
    நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.
  5. வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)
    நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
    கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
    டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்
    தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.
  6. உச்சாடணம் (ரோகஹரம்)
    வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
    நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
    பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
    நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.
  7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)
    நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
    வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
    ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
    வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே.
  8. பெரு வச்யம் (திரிகாலஞானம்)
    வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
    காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
    ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
    மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.
  9. பகை முடிப்பு (வித்வேஷணம்)
    வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்
    சிரித்துப் புரம்எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
    கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்
    பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.
  10. வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)
    பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
    பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
    கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
    தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.
  11. தேவி வருகை (பூதபந்தனம்)
    எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
    அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
    பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
    சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.
  12. ஆத்மபூஜை (மஹாமாரி பஜனம்)
    சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
    குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
    இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
    நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே