“வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கண்துடைப்புக்கான அறிவிப்பா?” : டிடிவி தினகரன்

 

“வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கண்துடைப்புக்கான அறிவிப்பா?” :  டிடிவி தினகரன்

வன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தேர்தலுக்காக தான் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாக தெரிகிறது என்று டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

“வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கண்துடைப்புக்கான அறிவிப்பா?” :  டிடிவி தினகரன்

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வந்த நிலையில் அதற்கான போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அளித்தால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ராமதாஸ் தரப்பில் கறார் காட்டியதால் அதிமுக அமைச்சர் தைலாபுரம் – கிரீன்வேஸ் சாலை என மாறி மாறி பயணித்து வந்தனர். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருந்த நிலையில், வன்னியர்களுக்கு தற்காலிக 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு மசோதாவை முதல்வர் பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அத்துடன் இந்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாமகவினர் தரப்பில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

“வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கண்துடைப்புக்கான அறிவிப்பா?” :  டிடிவி தினகரன்

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லா சமூகங்களுக்கும் சரியான இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அவசரகதியில் வன்னியர்களுக்கு 6மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தேர்தலுக்காக தான் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாக தெரிகிறது.

109 சமூகங்களை உள்ளடக்கிய MBC பிரிவில் எந்த சமூகமும் பாதிக்கப்படாத அளவிற்கு இட ஒதுக்கீட்டினை முறையாக வழங்குவதுதான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும்.எதற்காக இந்த அவசர கோலம்?வன்னியர் உள் ஒதுக்கீட்டினை ஆய்வு செய்ய இந்த அரசாங்கம் அமைத்த நீதிபதி குலசேகரன் கமிட்டி என்ன ஆனது? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பைப்போல இதுவும் ஒரு கண்துடைப்புக்கான அறிவிப்பா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் ஏற்பட்டிருக்கிறது ” என்று கூறியுள்ளார்.