லாரி மீது இருசக்கர வாகனம் மோதல் – ஒருவர் உயிரிழப்பு

 

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல் – ஒருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர்

வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆயற்பாடியை சேர்ந்தவர் செல்வம் (50). இவர் நியூடவுன் பகுதியில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கரவாகனத்தில் சென்றுள்ளார். வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றார்.

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல் – ஒருவர் உயிரிழப்பு

அப்போது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி வாகனத்துடன் சாலையில் விழுந்த செல்வம், லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குவந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.