இருசக்கர வாகனம் மீது மினிலாரி மோதி மூவர் பலி, 3 பேர் கவலைக்கிடம்

 

இருசக்கர வாகனம் மீது மினிலாரி மோதி மூவர் பலி, 3 பேர் கவலைக்கிடம்

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருசக்கர வாகனம் மீது மினிலாரி மோதி மூவர் பலி, 3 பேர் கவலைக்கிடம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் சேகர்(48). இவர் தக்காளி லோடு ஏற்றுவதற்காக செய்யாறு பகுதியை சேர்ந்த முருகன்(33) மற்றும் குணசேகர் (32) ஆகியோடன், நேற்றிரவு மினிவேனில் கிருஷ்ணகிரிக்கு சென்றார். வாணியம்பாடி அடுத்த நெக்குத்தி அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மினிவேன், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில் வேனில் பயணம் செய்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

இருசக்கர வாகனம் மீது மினிலாரி மோதி மூவர் பலி, 3 பேர் கவலைக்கிடம்

அவர்களை போலீசார் மீட்டு உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நடுப்பட்டறையை சேர்ந்த ஆகாஷ் மற்றும் பெத்த வேப்பம்பட்டையை சேர்ந்த சங்கர் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சேகர் உள்ளிட்ட 3 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.